
ரெஞ்சித் மகேஸ்வரி
ரெஞ்சித் மகேஸ்வரி மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். ஏற்கனவே ரெஞ்சித், காமன்வெல்த் போட்டியில் வெண்கலமும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கமும் வென்றுள்ளார்.

தரம்பீர் சிங்
200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், ஹரியானாவைச் சேர்ந்த 27 வயதான தரம்பீர் சிங், 20.45 வினாடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்தார். ஒலிம்பிக்கிற்கு தகுதிப் பெற வேண்டுமென்றால், 200 மீட்டர் ஓட்டத்தை 20.50 வினாடிகளுக்குள் கடக்க வேண்டும். கடந்த 36 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கப் போகும் இந்திய வீரர் என்ற பெருமையை தரம்பீர் சிங் பெற்றார்.

சுப்ரமணியம் பெருமாள்
இதற்கு முன் மாஸ்கோ ஒலிம்பிக்கில், சுப்ரமணியம் பெருமாள் என்பவர் 200 மீட்டர் ஓட்டத்திற்கு தகுதிப் பெற்றிருந்தார். ஆனால் அவர் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டார்.

ஜின்சன் ஜான்சன்
அதேபோல் கேரளத்தை சேர்ந்த மற்றொரு தடகள வீரர் ஜின்சன் ஜான்சன், ஒலிம்பிக்கில் 800 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்கப் போகிறார்.

டூட்டி சந்த்
ஆண்களுக்கான ஹார்மோன் அதிகமாக சுரப்பதாக கூறி, தடைக்கு உள்ளான இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த், ரியோ ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்கத் தகுதிப் பெற்றுள்ளார். ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிப் பெற்றுள்ள 99வது இந்தியர் டூட்டி சந்த் ஆவார்.

இலக்கை கடந்து சாதனை
கஜகஸ்தானின் அல்மாதி நகரில் நடந்த கோஸ்நோவ் நினைவு தடகளப் போட்டியில், 100 மீட்டர் ஓட்டத்தில், இலக்கை 11.30 வினாடிகளில் கடந்ததையடுத்து, ஒலிம்பிக் போட்டிக்கு டூட்டி சந்த் முன்னேறியுள்ளார்.

36 ஆண்டுகளுக்குப் பின்
கடந்த 1980 ம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 100 மீட்டர் தூர ஓட்டப் போட்டியில் இந்தியா சார்பில் பி.டி. உஷா பங்கேற்றார். அவருக்குப் பின், அதாவது 36 ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போது டூட்டி சந்த் அப்போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications











