ரியோ: ரியோடி ஜெனிரோவில் நடைபெற்று வரும் 100 மீட்டர் மகளிர் ஓட்டத்தில் இந்தியாவின் டூட்டி சந்த் 7-வது இடம் பிடித்து வெளியேறினார்.
1980 மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100மீட்டர் ஓட்ட பந்தயத்தில் சவால்களை தாண்டி இந்தியா சார்பில் கலந்து கொண்டவர் பி.டி உஷா. 36 ஆண்டுகளுக்கு பிறகு ரியோ ஒலிம்பிக் போட்டில் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றார் இந்தியாவின் டூட்டி சந்த்.

இன்றைய போட்டியில் டூட்டி சந்த் 11.69 வினாடிகள் கடந்து 7-ம் இடம் பிடித்து வெளியேறினார். 36 ஆண்டுக்குப் பிறகு 100 மீட்டர் மகளிர் ஓட்டத்தில் இந்தியா பதக்கம் வெல்லும் என்ற கனவு கை கூடாமல் போனது.