
பிரதமர் நிதிக்கு உதவி
சமீபத்தில்தான் பிரதமர் கேர்ஸ் நிதியத்திற்கு ரூ. 30,000 நிதியுதவி அளித்திருந்தார் இஷா சிங். இந்த நிலையில் தற்போது தனது வீட்டில் டிரை பிராக்டிஸை தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், நான் தினசரி எனது ரொட்டீன் பயிற்சிகளை செய்து வருகிறேன். காலை 6 மணிக்கு எழுந்திருக்கிறேன். 7 மணி முதல் 9 மணி வரை பயிற்சி தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

படிப்பு முக்கியம் அமைச்சரே
பிறகு பாடம் படிக்கிறேன். ஒர்க் அவுட் செய்கிறேன். அதன் பின்னர் எனது 2வது செஷன் பயிற்சி ஆரம்பித்து விடும். பிரதமர் நிதிக்கு நான் நிதியுதவி கொடுத்துள்ளேன். எல்லோரும் கொடுங்க. எல்லோரும் வீட்டிலேயே இருங்க. அதுதான் நமக்கு பாதுகாப்பு. என்னைப் போலவே எல்லோரும் வீட்டிலேயே தங்கியிருந்து நம்மையும் நாட்டையும் பாதுகாப்போம் என்று இஷா சிங் கூறியுள்ளார்.

தங்கம் வென்ற இளம் புலி
இஷா சிங் 17 வயதுக்குட்பட்டோருக்கான கேலோ இந்தியா யூத் கேம்ஸின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற சாதனையாளர் ஆவார். இளம் வயதிலேயே சாதனைகளுக்குச் சொந்தக்காரரான இஷா சிங்கின் இலக்கு எதிர்காலத்தில் ஒலம்பிக்கில் அசத்த வேண்டும் என்பதுதான். 2018 தேசியப் போட்டியில் இவர் சீனியர், ஜூனியர் மற்றும் இளையோர் பிரிவில் தங்கம் வென்றவர் என்பது கூடுதல் செய்தியாகும்.

ரெஸ்ட்டும் பயிற்சியும்
இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது எந்தப் போட்டியும் நடைபெறவில்லை. விளையாட்டு வீராங்கனைகளும், வீரர்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். ஆனால் யாருமே சோம்பேறித்தனமாக இருக்கவில்லை. உடற்பயிற்சி செய்தபடியும், வீட்டு வேலை செய்தபடியும், சமூக வலைதளங்களில் பேசியபடியும் உள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











