கார் பந்தயங்களில் இனி கிரிட் பெண்கள் கிடையாது.. பார்முலா 1 அதிரடி!
சென்னை: கார் பந்தயங்களில் இனி கிரிட் பெண்கள் பயன்படுத்தப்பட மாட்டார்கள் என்று பார்முலா 1 அமைப்பு அறிவித்துள்ளது.
பொதுவாக கார் பந்தயங்களில் கிரிட் பெண்கள் அதிகம் பயன்படுத்தப்படுவார்கள். போட்டி ஆரம்பிக்கும் போது இவர்கள்தான் கொடி காட்டுவார்கள்.

அதுபோல் இவர்கள்தான் ஒவ்வொரு சுற்று முடியும் போது கொடியை அசைப்பார்கள். போட்டி முடிந்த பின் கோப்பை வழங்கும் போதும் இவர்கள் மேடையில் இருக்க வேண்டும்.
ஆனால் இனி இவர்கள் போட்டிகளில் இடம்பெற மாட்டார்கள் என்று பார்முலா 1 அமைப்பு அறிவித்துள்ளது. அவர்கள் இருப்பது அந்த விளையாட்டின் தரத்தை குறைக்கிறது என்று கூறியுள்ளது.
மேலும் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதை விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டு இருக்கிறது. இவர்களின் இந்த முடிவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதுபோல் மற்ற பார்முலா வகை கார் பந்தையை போட்டிகளிலும் கிரிட் பெண்கள் இருக்க மாட்டார்கள் என்று முடிவாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications