டெல்லி: 12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் 5வது சீசனின் கடைசி லீக் ஆட்டங்கள் இன்று நடக்கின்றன. டெங்குவுக்கு எதிராக தினமும் ஒரு புது புது தகவல்களை அள்ளிவிடும் அரசியல்வாதிகளும், நடிகர்களை போல, கடந்த மூன்று மாதங்களாக இந்த 12 அணிகளும் மாறி மாறி விளையாடின.
புரோ கபடி லீக் 5வது சீசன் போட்டிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. இந்தத் தொடரில் முதல் முறையாக களமிறங்கிய தமிழ் தலைவாஸ் அணி, கடைசி நேர சொதப்பல்களால், பல வெற்றி வாய்ப்புகளை இழந்து முதல் சுற்றிலேயே வெளியேறியது.