சென்னை: ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 31) மாலை முதல் நடைபெற உள்ளது. நாளை (செப்டம்பர் 1) முக்கிய போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகளை நேரில் காண டிக்கெட்களும் ஆன்லைனில் விற்கப்பட்டு வருகின்றன. தெற்கு ஆசியாவிலேயே முதன் முறையாக இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் மட்டுமே நடைபெறும் ஃபார்முலா பந்தயத்தை நம் ஊரில் நேரில் காணலாம் என விரும்பி டிக்கெட் வாங்கிச் செல்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாடு அரசு சார்பில் எந்தெந்த பொருட்களை ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறும் இடம் மற்றும் பார்வையாளர்கள் இடத்திற்குள் கொண்டு செல்லக் கூடாது என விரிவாக கூறப்பட்டு உள்ளது. அதன் விவரம் -

இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. இந்த விதிகள் பார்வையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், அதிகாரிகள் என ஃபார்முலா பந்தயத்தை காணச் செல்லும் அனைவருக்கும் பொருந்தும். இந்தப் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்க விரும்புபவர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 2-வில் காணலாம். மொபைலில் பார்க்க விரும்புபவர்கள் ஃபேன்கோட் (fancode) செயலியில் கட்டணம் செலுத்தி பார்க்கலாம்.