
ஏமாற்றம்
அனுபவமிக்க வீரர்களான யுவராஜ் மற்றும் ஜாஹீர் கான் ஆகியோர் உலகக் கோப்பை அணியில் இடம்பெறாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்திய அணிக்காக பாடுபட்ட அவர்களுக்கு தற்போது உலகக் கோப்பை அணியில் இடம் இல்லை.

யுவராஜ்
2011ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற உதவிய யுவராஜ் சிங் அணியில் சேர்க்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. தேர்வாளர்களின் லாஜிக்கே புரியவில்லை.

அக்சார் பட்டேல்
அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது நல்லது தான். ஆனால் அவர்கள் எந்த அளவுக்கு விளையாடுவார்கள் என தெரியவில்லை. அக்சார் பட்டேல், புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு பயிற்சி தேவை. ஆனால் அதற்குள் அவர்களை உலகக் கோப்பை போட்டிக்கு அனுப்பி வைத்துவிட்டனர்.

கோஹ்லி
நம் அணியில் ஒரு சில பந்துவீச்சாளர்கள் தான் உள்ளனர். இந்நிலையில் நாம் எப்படி வெற்றி பெறப் போகிறோம். விராத் கோஹ்லி திறமையானவர். அவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது.

இறுதிப் போட்டி
இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வரும் என்று எனக்கு தோன்றவில்லை. தென்னாப்பிரிக்கா தான் உலகக் கோப்பையை வெல்ல உள்ளது என்றார் சுனில்.


Click it and Unblock the Notifications











