
வெற்றி வாய்ப்பு
தென்னாபிரிக்க அணியின் பயிற்சியாளர்களான கிரிஸ்டன் மற்றும் ஹஸ்ஸியை பற்றியே இந்திய அணி நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியது போன்றே ஆடினால் தென்னாப்பிரிக்காவை தோற்கடிக்க நல்ல வாய்ப்பு உள்ளது என்று சாப்பல் தெரிவித்துள்ளார்.

டோணி
டோணியிடம் இருந்து அதே தலைமை குணங்கள் வெளிப்பட்டால் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும். தென்னாப்பிரிக்காவின் ஆட்டம் பற்றி எனக்கு கவலை இல்லை. ஸ்டெய்ன் இருக்கிறார், மோர்கல் ஆட்டம் சரியில்லை, பிலாண்டர் வேகமாக விளையாடுவது இல்லை, இம்ரான் தாஹிர் ஆஸ்திரேலியர்களிடம் தோற்றார். ஆஸ்திரேலியாவை விட இந்தியா அருமையாக ஸ்பின் செய்யும் என்றார் சாப்பல்.

ஐபிஎல்
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான கேரி கிரிஸ்டனுக்கு டோணி அன்ட் கோ உடை மாற்றும் அறையில் எப்படி நடந்துகொள்வார்கள் என்று நன்கும் தெரியும். ஹஸ்ஸி ஐபிஎல் போட்டியில் விளையாடி உள்ளார். அவர்கள் இருவரும் தென்னாப்பிரிக்க அணியிடம் இந்திய பந்துவீச்சாளர்கள் பற்றிய விவரங்களை தெரிவித்திருப்பார்கள் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பேட்டிங்
தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை இந்தியா லேசில் எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்தியா துவக்கத்தில் இருந்தே சிறப்பாக ஆடி குறைந்தபட்சம் 260-270 ரன்கள் எடுக்க வேண்டும் என்றார் கவாஸ்கர்.


Click it and Unblock the Notifications