
முதல் கோல்டு
23 வயதான நீரஜ் சோப்ரா, ஆகஸ்ட் 7 சனிக்கிழமை ஈட்டி எறிதலில் முதலிடம் பிடித்து தடகளத்தில் இந்தியாவின் முதல் தங்கத்தை வென்றார். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் வென்ற பிறகு, அபினவ் பிந்த்ரா நாட்டின் முதல் தனிநபர் தங்கத்தை வென்றார். இனி, தடகளத்தில் இந்தியாவின் முதல் தங்கம் வென்றவராக நீரஜ் சோப்ரா குறித்து எப்போதும் விவாதிக்கப்படும்.

முதல் சாதனை
மகளிர் ஒற்றையர் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம், பிவி சிந்து ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு தனிநபர் பதக்கங்களை வென்ற இந்தியாவின் முதல் வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றுள்ளார். 2016 ஆம் ஆண்டு ரியோவில் நடந்த போட்டிகளில் அவர் வெள்ளி வென்றார். பாலினத்தை கடந்து, உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் மற்றும் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் சிந்து பெற்றார். அவர் 2019 இல் உலக சாம்பியன்ஷிப்பை வென்றார்.

2000க்கு பிறகு
49 கிலோ பிரிவில் பளுதூக்குதலில் மீராபாய் சானுவின் வெள்ளி, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கமாகும். அதேபோல், ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் இந்தியருக்கு கிடைத்த முதல் வெள்ளிப் பதக்கம் ஆகும். பளுதூக்குதலில் நாட்டின் இரண்டாவது பதக்கம் இதுவாகும். கர்ணம் மல்லேஸ்வரி 2000 இல் நடந்த சிட்னி விளையாட்டுப் போட்டியில் 69 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றார்.

முதன் முறை ரெக்கார்டு
இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக அரையிறுதியை எட்டி வரலாறு படைத்தது. அவர்கள் காலிறுதியில் உலகின் இரண்டாவது தரவரிசை அணியான ஆஸ்திரேலியாவை வீழ்த்தினர். எனினும், அவர்கள் அரையிறுதியில் அர்ஜென்டினாவிடம் தோற்றார்கள். 1980 மாஸ்கோ விளையாட்டுப் போட்டியில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்திருந்தாலும், போட்டியில் ஆறு அணிகள் மட்டுமே ரவுண்ட்-ராபின் வடிவத்தில் இடம்பெற்றன. முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகள் பதக்கங்களை வென்றன. 2016 ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா 12 வது இடத்தைப் பிடித்தது.

ஒரு ஷாட்டில் மிஸ்
அதிதி அசோக் ஆகஸ்ட் 7 சனிக்கிழமையன்று நடந்த மகளிர் தனிநபர் ஸ்ட்ரோக் ப்ளே நிகழ்ச்சியில் பதக்கத்திற்கு மிக நெருக்கமாக வந்தார். உலக அளவில் 200 வது இடத்தில் இருக்கும் 23 வயதான அதிதி, பெரும்பாலான சுற்றுகளில் இரண்டாவது இடத்தில் இருந்தார். இருப்பினும், இறுதி நாளில் ஒரு ஷாட் மூலம் அவர் தனது பதக்கத்தை இழந்தார். அவர் 2016 ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று 41 வது இடத்தைப் பெற்றார்.

முதன்முறை அரையிறுதி
ஜூலை 25 அன்று, அர்ஜுன் லால் ஜாட் மற்றும் அரவிந்த் சிங் ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு வந்த முதல் இந்திய Double Sculls ஜோடி ஆனார்கள். அவர்கள் அந்த நிகழ்வில் 11 வது இடத்தைப் பிடித்தனர், இது ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த முடிவாகும். 2012 ஆம் ஆண்டு லண்டன் விளையாட்டுப் போட்டியில் 18 வது இடத்தைப் பிடித்ததே இந்தியாவின் முந்தைய சிறந்த நிகழ்வாகும்.


Click it and Unblock the Notifications











