ஜகார்த்தா : ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.
இந்தோனேசியாவில் தற்போது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலத்துடன் தற்போது 7வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் இன்று ஆசிய விளையாட்டு போட்டியில் 68 கிலோ எடைப் பிரிவில் பெண்கள் மல்யுத்தம் நடந்தது. மிகவும் வலுவான தாய்லாந்து வீராங்கனை சென் வென்லிங்கை இந்தியா வீராங்கனை திவ்யா காக்ரன் எதிர்கொண்டார்.
நீண்ட நேரம் நடைபெற்ற இந்த போட்டியில் வீராங்கனை திவ்யா காக்ரன் தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்தார். இந்த நிலையில் கடைசி நேரத்தில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி திவ்யா காக்ரன் வென்றார்.
[ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018]
இந்திய வீராங்கனை திவ்யா காக்ரன் வெண்கலப் பதக்கம் வென்றார். தாய்லாந்து வீராங்கனை சென் வென்லிங்கை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி அபாரமாக பதக்கம் வென்றார். இதனால் பெண்கள் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.