
விஜய்குமார்
இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஹமிர்புர் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய்குமார். துப்பாக்கிச் சுடும் போட்டியில் 25 மீட்டர் ஆண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

சாய்னா நெய்வால்
பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் வெண்கலத்தை வென்றார் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சாய்னா நெய்வால். இதன் மூலம் லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. மேலும் ஒலிம்பிக் போட்டியிலேயே பேட்மிண்டனில் வெற்றி பெற்று பதக்கம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார் சாய்னா.

மேரிகோம்
பெண்கள் பிரிவு குத்துச் சண்டைப் போட்டியில் வெண்கலத்தை வென்றார் மேரிகோம். இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் வெற்றிக்கு குழந்தைகள் தடையில்லை என்பதை நிருபித்தார். மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் குத்துச் சண்டைப் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

யோகேஷ் தத்
ஹரியான மாநிலத்தைச் சேர்ந்தவர் யோகேஷ் தத். 60 கிலோ ஆண்கள் பிரிவு மல்யுத்தப் போட்டியில் வட கொரிய வீர்ரான ரீ ஜங்கை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை அடைந்தார்.

சுஷில்குமார்
டெல்லியைச் சேர்ந்தவர் சுஷில்குமார். 66 கிலோ எடை மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இவர் 2008ம் ஆண்டு சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் முதன் முறையாக வெண்கலப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











