
ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2014 நடந்து வருகிறது. இது 22வது ஒலிம்பிக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பங்கேற்ற இந்திய வீரர் சிவகேசவனால் 37வது இடத்தையே பிடிக்க முடிந்தது.
இந்தியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் சங்க தேர்தல் குளறுபடிகளால்,இந்திய வீரர்கள் ஒலிம்பிக் கொடியுடனே பங்கேற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், "லூஜ்" விளையாட்டில் பங்கேற்ற இந்திய வீரர் சிவகேசவன்,அப்போட்டியின் நான்கு சுற்றுகளிலும் சரியாக விளையாடாததால் தோல்வியடைந்தார். இதில், சிவகேசவனுக்கு 37வது இடமே கிடைத்தது.
இம்முறை லூஜ் போட்டியில் 39வீரர்களே பங்கேற்ற நிலையில் சிவகேசவனின் இந்த தோல்வி,குளிர்கால ஒலிம்பிக்கில் இந்தியாவின் மோசமான தோல்வியாக அமைந்து விட்டது.