For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மலேசியாவில் கால்பந்தாட்ட சூதாட்டம்: 31 பேர் அதிரடி கைது

By Veera Kumar

கோலாலம்பூர்: உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளையொட்டி சூதாட்டம் நடத்திய 31 பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது அதன் முடிவை யூகித்து சூதாட்டம் நடப்பது இந்தியாவில் வழக்கம். உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், இதை வைத்தும் உலகமெங்கும் சூதாட்டம் சூடிபிடித்துள்ளது. மலேசியாவிலும் இதுபோன்ற ஒரு சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார், மலேசியாவின் தெற்கு மாநிலமான ஜோகோர் பகுதியின் பல இடங்களில் சோதனைகள் நடத்தினர். அதில் சூதாட்டம் நடைபெறுவது உண்மைதான் என்பது தெரியவந்தது.

சூதாட்டத்தில் ஈடுபட்ட 31 பேரை கைது செய்த போலீசார், மலேசிய பணமான 61 ஆயிரத்து 215 ரிங்கிட் மற்றும் 5650 சிங்கப்பூர் டாலர்களை பறிமுதல் செய்தனர். உலக கோப்பை முடிவடையும்வரையில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று காவல் துறை அறிவித்துள்ளது.

Story first published: Friday, June 20, 2014, 18:04 [IST]
Other articles published on Jun 20, 2014
English summary
Raids by the Malaysian police have led to the arrest of 31 people for alleged involvement in illegal betting on the FIFA World Cup.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+