For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அந்த நொடி.. தேசிய கீதம் ஒலிக்க.. கைகளில் மெடல்.. கண்களில் கண்ணீர் - "தங்கமகன்" நீரஜ் உருக்கம்

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா தனது வெற்றிப் பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

Recommended Video

Neeraj Chopra Brings National Anthem for India in Olympics | OneIndia Tamil

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், இந்தியா மொத்தமாக 7 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப்பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது.

இதுவரை நடந்த ஒலிம்பிக் தொடரில், இம்முறை இந்தியா அதிக பதக்கங்களை வென்றுள்ளது. குறிப்பாக, அத்லெடிக் பிரிவில், தனி நபராக முதன் முதலில் டோக்கியோவில் தங்கம் வென்றிருக்கிறார் நீரஜ் சோப்ரா. ஈட்டி எறிதலில் அவர் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

என் மனதில் ஓடியது

என் மனதில் ஓடியது

இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்ப, அத்தனைக்கும் மிக நேர்த்தியாக, தெளிவாக பதில் அளித்துள்ளார். அவர் பேசியதாவது, "இறுதிப் போட்டி நடைபெற்றபோது, முந்தைய த்ரோவை விட மிகச் சிறப்பாக நான் இன்னும் முன்னேற வேண்டும் என்பது தான் என் மனதில் ஒரே ஒரு விஷயம் இருந்தது. உடல் முற்றிலும் நன்றாக ஒத்துழைத்தது, நான் என்னால் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்த முடியும் என்று உணர்ந்தேன். என்னால் தேசிய சாதனையை முறியடிக்க முடியாவிட்டாலும், எனது தனிப்பட்ட திறமையைச் செய்ய முடியாவிட்டாலும், ஒலிம்பிக் தங்கம் வெல்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மற்ற அனைவரும் தங்கள் இறுதி த்ரோவில் போதுமான அளவு தூரம் வீசத் தவறியதால் தான், நான் தங்கம் வென்றுள்ளேன் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் கவனம் செலுத்த வேண்டியிருந்தது, ஏனென்றால் நீங்கள் தங்கம் வென்றதாக மகிழ்ச்சி அடைந்தால், தேவையான முயற்சியை மேற்கொண்டு செய்ய முடியாது.

பெருமைமிக்க தருணம்

பெருமைமிக்க தருணம்

அத்லெட்டில் முதல் பதக்கம் வென்றுள்ளேன், அதுவும் அது தங்கமாக அமைந்ததால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனவே, இது ஒரு அருமையான தொடக்கம் என்பேன். என்னால் மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால் தேசிய கீதம் இசைக்கப்படும் போது நான் தங்கப் பதக்கத்துடன் நின்று கொண்டிருந்த போது அது ஒரு பெருமையான தருணமாக இருந்தது. அந்த நேரத்தில் உணர்ச்சி வசப்பட்டேன். மிகவும் பெருமையாக இருந்தது. இந்திய தடகளத்திற்கு எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

அவர்களே காரணம்

அவர்களே காரணம்

இப்போதைக்கு, இந்த தங்கப் பதக்க வெற்றியைக் கொண்டாட முயற்சிப்பேன், வீட்டிற்குச் செல்வேன், அதன் பிறகு, பயிற்சி நன்றாக அமைந்தால், நான் இந்த ஆண்டு போட்டிகளில் பங்கேற்பேன். இல்லையெனில், அடுத்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு மற்றும் உலக சாம்பியன்ஷிப்பில் கவனம் செலுத்துவேன். நான் 2019 ஆம் ஆண்டு முதல் பயிற்சியாளர் கிளாஸின் கீழ் பயிற்சி பெற்று வருகிறேன், இந்த பதக்கத்திற்கு அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார், ஏனெனில் அவரது பயிற்சி திட்டங்களும் நுட்பங்களும் எனக்கு நன்றாக பொருந்துகிறது. நான் 2018 இல் பயிற்சியாளர் உவேயுடன் இணைந்தேன், அவர் மூலமாக, நான் முக்கியமாக என் பலத்தை மேம்படுத்தினேன், ஆனால், அவர் சொன்ன நுட்பம் சற்று வித்தியாசமானது என்று நான் உணர்ந்தேன், அதைப் பற்றி அவரிடம் பேசினேன். பின்னர், நான் பயிற்சியாளர் கிளாஸுடன் இணைந்த போது, அவருடைய நுட்பமும் கற்பித்தல் முறைகளும் எனக்கு மிகவும் பொருத்தமாக இருந்தன. ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் அவரவர் முறைகள் உள்ளன. ஒவ்வொரு பயிற்சியாளரும் புதிய மற்றும் வித்தியாசமான ஒன்றைக் கற்பிக்கிறார்கள். எனவே, ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் அளவுக்கு எனக்கு பயிற்சி அளித்த உவே சார் மற்றும் கிளாஸ் சார் ஆகியோருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

யாரிடமும் பேசவில்லை

யாரிடமும் பேசவில்லை

இறுதிப் போட்டிக்கு முன்பு பயிற்சியாளர் கிளாஸ், தகுதிச் சுற்றில் செய்ததைப் போலவே முதல் த்ரோவில் உன்னால் முடிந்த தூரத்துக்கு வீசு என்று சொன்னார். பிறகு நான் என் மாமா மற்றும் என் சீனியர் ஜெயவீருடன் ஆகியோருடன் மட்டும் கொஞ்சம் பேசினேன். வேறு யாரிடமும் அதிகம் பேசவில்லை. ஏதோ ஒரு நல்ல விஷயம் நடக்கும் என்று அவர்கள் நம்பினார்கள் என்று நினைக்கிறேன். பின்னர் நான் தங்கம் வென்றேன், அவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அம்மா சமைத்த உணவு

அம்மா சமைத்த உணவு

நான் வீட்டிற்குச் சென்று அங்கு சமைத்த உணவைச் சாப்பிடுவேன், அது சூர்மாவாக (நீரஜுக்கு பிடித்த வீட்டுச் சாப்பாடு) இருந்தாலும் சரி.. என் அம்மாவால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு உணவாக இருந்தாலும் சரி. நான் இங்கே செய்ய வந்ததைச் செய்துவிட்டேன், இந்தியாவை அடைந்து வீட்டில் சமைத்த உணவைச் சாப்பிடுவதற்காகக் காத்திருப்பது மட்டுமல்லாமல், வெற்றியை மக்களுடன் கொண்டாடவும், பிறகு மீண்டும் எனது பயிற்சியைத் தொடங்கவும் விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, August 9, 2021, 12:02 [IST]
Other articles published on Aug 9, 2021
English summary
Neeraj Chopra thank coaches Klaus, Uwe Hohn - நீரஜ் சோப்ரா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+