For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரியோ ஒலிம்பிக்கில் இதுவரை "மகிழ்ச்சி" தராத தமிழர்கள்

By Mathi

சென்னை: ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழர்களுக்கு இதுவரை எந்த ஒரு பதக்கமும் கிடைக்காமல் போனது ஏமாற்றத்தைத் தருகிறது...

ஒலிம்பிக் வரலாற்றிலேயே 100க்கும் அதிகமான இந்தியர்கள் முதல் முறையாக தற்போதுதான் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 15 விளையாட்டுகளில் 66 பிரிவுகளில் இந்தியர்கள் பங்கேற்கின்றனர்.

sathish kumar sivalingam

இவர்களில் 7 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம், டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், தடகளம் கணபதி, ஆரோக்கிய ராஜீவ் என மொத்தம் 7 பேர்... இவர்கள் அல்லாமல் ஈழத் தமிழரான துளசி தருமலிங்கம், கத்தார் நாட்டுக்காக குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்றார்.

இதில் நேற்று ஒரே நாளில் 2 தமிழர்கள் தோல்வியைத் தழுவியது ஏமாற்றத்தைத் தந்தது. ஆண்கள் 77 கிலோ பளுத்தூக்கும் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் 4 ஆம் இடம் பிடித்து தோல்வியடைந்தார்.

இதேபோல் குத்துச்சண்டையில் மங்கோலிய வீரரிடம் கத்தார் அணிக்காக களமிறங்கிய ஈழத் தமிழர் துளசி தருமலிங்கமும் தோல்வியைத் தழுவினார்.

thulasitharumalingam

எஞ்சிய தமிழராவது ஏதேனும் பதக்கங்களை கைப்பற்றி "மகிழ்ச்சி" தருவார்களா?

Story first published: Thursday, August 11, 2016, 11:14 [IST]
Other articles published on Aug 11, 2016
English summary
Tamil players still not sending good messages from Rio Olympics.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+