கிறைஸ்ட்சர்ச்: கடந்த உலக கோப்பையில் கடைசி பந்தை வீசிய நுவான் குலசேகரா, இந்த உலக கோப்பையின் முதல் பந்தையும் வீசினார்.
2011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி மும்பையில் நடந்தது. இந்தியா-இலங்கை மோதின. இரண்டாவது பேட்டிங் செய்த இந்தியா 48.2வது ஓவரில் டோணியின் இமாலய சிக்சருடன் வெற்றிக் கனியை பறித்தது. அந்த ஓவரை வீசியது இலங்கை மிதவேக பந்து வீச்சாளர் குலசேகராவாகும். ஆக.. கடந்த உலக கோப்பையின் கடைசி பந்தை குலசேகரா வீசியதாக வரலாறு பதிவு செய்தது.

இந்நிலையில் 2015ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகள் இன்று தொடங்கின. முதல் போட்டியில் இலங்கை-நியூசிலாந்து மோதின. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஓவரை குலசேகரா வீசினார். இதன் மூலம், கடந்த உலக கோப்பையின் கடைசி பந்தையும், இந்த உலக கோப்பையின் முதல் பந்தையும் வீசிய பெருமையை குலசேகரா யதேர்ச்சையாக பெற்றுள்ளார்.
போன ஜென்ம பந்தம் என்பதை போல போன உலக கோப்பை தொடர்ச்சி போலும் இது..