
ஒலிம்பிக் 2020
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மணிகா பத்ரா நேற்று ஆஸ்திரியாவின் சோபியாவிடம் தோல்வி அடைந்து ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார். இதனால் ஏற்கனவே போர்ச்சுகல் வீரரை வீழ்த்திய ஷரத் கமல் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.

இன்று
இன்று டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இந்தியா சார்பாக ஷரத் கமல் அஜந்தா மூன்றாவது சுற்று ஆட்டத்தில் சீனாவின் மா லிங்கை எதிர்கொண்டார். கடைசியாக சுற்று ஆட்டத்தில் போர்ச்சுகலின் டியாகோ அப்போலீனாவை ஷரத் எதிர்கொண்டார். இதில் 4‐2 என்ற புள்ளி கணக்கில் ஷரத் கமல் அஜந்தா வெற்றி பெற்றார்.

மூன்றாம் சுற்று
இதையடுத்து இன்று மூன்றாம் சுற்றில் ஷரத் கமல் அஜந்தா மற்றும் சீனாவின் மா லாங் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் முதல் செட்டை 11-7 என்ற கணக்கில் சீனாவின் மா லாங் கைப்பற்றினார். இரண்டாவது சுற்றை ஷரத் 11-8 என்ற புள்ளிகள் கைப்பற்றினார். பின்னர் மீண்டும் மூன்றாவது சுற்றை 13-11 என்ற கணக்கில் சீனாவின் மா லாங் கைப்பற்றினார்.

இரண்டு சுற்றுகள்
பின்னர் 4 மற்றும் 5வது சுற்று முழுக்க சீனாவின் மா லாங்தான் ஆதிக்கம் செலுத்தினார். இரண்டு சுற்றுகளிலும் ஷரத் கடுமையாக திணறிய நிலையில் 11-4 என்ற கணக்கில் இரண்டு சுற்றுகளையும் லாங் கைப்பற்றினார். இதனால் 5 சுற்றுகளிலேயே ஆட்டம் முடிவிற்கு வந்தது. 5 சுற்றுகள் முடிவில் இந்திய வீரர் ஷரத் அஜந்தா சீன வீரர் மா லாங்கிடம் 4-1 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தார்.


Click it and Unblock the Notifications











