
1988 முதல்
இந்த நிலையில், மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில் இந்த வருடம் ஒலிம்பிக் நடக்க உள்ளது. அது சரி.. ஒலிம்பிக் போட்டிகளின் போது, ஏன் வீரர்களுக்கு பாக்கெட் பாக்கெட்டாக காண்டம் கொடுக்கிறார்கள்? என்று சமீபத்தில் பார்த்தோம். அதாவது, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று 1988ல் இருந்து ஒலிம்பிக் போட்டிகளில் காண்டம் வழங்கப்பட்டு வருகிறது என்று பார்த்தோம்.

மன அழுத்தம்
பொதுவாக, தடகள வீரர்களுக்கு தான் அதிக அளவில் ஆணுறைகள் வழங்கப்படுகின்றன. ஏனெனில், தடகள வீரர்களை போன்ற திடகாத்திரமான ஆட்களுக்கு உடலில் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும் என்பதாலும், உடலுறவில் ஈடுபடுவது மன அழுத்தம் குறைய உதவும் என்பதாலும் இதுப்போன்ற போட்டி காலங்களில் அதிகளவில் இவர்கள் உடலுறவில் ஈடுபட காரணமாக அமைவதாக கூறப்படுகிறது.

பாலியல் உறவு
இந்நிலையில், கடந்த 2000ம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் குறித்து, அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீரர் Ryan Lochte சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இவர் 12 முறை ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து outlookindia தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில், பேசிய ரியான், "மக்கள் திறந்த வெளியில் உடலுறவில் ஈடுபடுவதை அப்போது பார்க்க முடிந்தது. புல் தரை மீதும், கட்டிடங்களுக்கு இடையிலும் என பலரும் உடலுறவில் ஈடுபட்டனர் என்று தெரிவித்துள்ளார். மேலும், 2000 ஒலிம்பிக்கில், 70-75% விளையாட்டு வீரர்கள் பாலியல் உறவு கொண்டவர்கள் தான் என்று மதிப்பிட்டுள்ளார்.

20,000 எக்ஸ்ட்ரா காண்டம்ஸ்
அதுமட்டுமின்றி, அதே சிட்னி ஒலிம்பிக் போட்டியில், ஒருக்கட்டத்தில் காண்டம்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இந்த ஒலிம்பிக் வாரியத்துக்கு வீரர்கள் கொண்டுச் செல்ல, மேலும் 20,000 காண்டம்களை உடனடியாக ஆர்டர் செய்து மீண்டும் வீரர்களுக்கு வழங்கி, அவர்களின் தேவையை ஆஸ்திரேலிய ஒலிம்பிக் நிர்வாக அதிகாரிகள் நிவர்த்தி செய்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











