அஞ்சும் மௌத்கில் - இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை
விளையாட்டு - துப்பாக்கி சுடுதல்
நாடு - இந்தியா
பிறந்த தேதி - ஜனவரி 5, 1994
உயரம் - 5′4″
வசிக்கும் இடம் - சண்டிகர்
பிறந்த இடம் - சண்டிகர்
ஒலிம்பிக் அனுபவம் - 2020, 2024
அஞ்சும் மௌத்கில் வாழ்க்கை வரலாறு
அஞ்சும் மௌட்கில், ஒரு முக்கிய இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை, 2009 ஆம் ஆண்டு தனது பயணத்தை தொடங்கியதில் இருந்து விளையாட்டு உலகில் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறார். அவரது தாயாரால் துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டார். தேசிய அளவிலான போட்டியாளராகவும் இருக்கிறார். துவக்கத்தில் பிஸ்டல் பிரிவில் இருந்தார். பின்னர், அவர் நேஷனல் கேடட் கார்ப்ஸ் (NCC) உடன் இருந்த காலத்தில், ரைபிள் ஷூட்டிங்கிற்கு மாறினார். அது அவரை ஈர்க்கக்கூடியதாக இருந்ததால் அதில் ஈடுபட்டார்.

இந்தியாவில் பிறந்து வளர்ந்த அஞ்சும் சண்டிகரில் உள்ள DAV கல்லூரியில் விளையாட்டு உளவியலில் உயர்கல்வி பயின்றார். அவரது கல்விப் பின்னணி, போட்டிக்கு தேவையான மன நிலைகளை புரிந்துகொள்வதற்கான அடித்தளத்தை அவருக்கு வழங்கியுள்ளது.
தொழில்
அஞ்சும் 2017 ஆம் ஆண்டு பஞ்சாப் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக சேர்ந்தார். காவல்துறை தடகள வீராங்கனையாக தனது கடமைகளை சமநிலைப்படுத்தி, துப்பாக்கி சுடுவதில் தொடர்ந்து சிறந்து விளங்கினார். அவர் துப்பாக்கி சுடுதலில் வலது கை மற்றும் தன் வலது கண்ணை பயன்படுத்துகிறார்.
சாதனைகள் மற்றும் விருதுகள்
2019 இல், இந்தியாவின் மதிப்புமிக்க அர்ஜுனா விருதைப் பெற்றார். கடந்த ஆண்டு, அவர் கோ ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளையால் ஒலிம்பிக் விளையாட்டில் ஆண்டின் சிறந்த தடகள வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சவால்கள் மற்றும் காயங்கள்
2014 ஆம் ஆண்டில், கனரக துப்பாக்கியுடன் பயிற்சியின் போது அஞ்சும் தனது முதுகு மற்றும் இடது தோள்பட்டையில் காயம் அடைந்ததால் குறிப்பிடத்தக்க பின்னடைவை எதிர்கொண்டார். சண்டிகரில் உள்ள அவரது வீட்டில் மூன்று மாதங்கள் ஓய்வு பெற்று மீண்டு வரும் பயிற்சிகளை பெற்றார். இந்த சவாலையும் மீறி, அவர் வலுவான மறுபிரவேசம் செய்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
அஞ்சும் 2008 காமன்வெல்த் யூத் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அங்குஷ் பரத்வாஜை மணந்தார். இந்த ஜோடி விளையாட்டின் மீதான பரஸ்பர ஆர்வத்தின் மூலம் ஆழமான தொடர்பைப் பகிர்ந்து கொள்கிறது.
பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்கள்
துப்பாக்கி சுடுதலுக்கு வெளியே, அஞ்சும் கைவினைப்பொருட்கள் மற்றும் ஓவியங்களை ரசிக்கிறார். அவர் ஓவியம் தன்னை மேம்படுத்த உதவுவதாக நினைக்கிறார். மேலும், அது பயிற்சியின் போது சிறப்பாக கவனம் செலுத்த உதவுகிறது என்று நம்புகிறார். "நான் ஓவியம் தீட்டும்போது, நான் முற்றிலும் தொலைந்து போகிறேன்," என்று அவர் கூறி இருக்கிறார்.
உத்வேகம் மற்றும் தத்துவம்
இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா மற்றும் அமெரிக்க டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே அகாசி ஆகியோரை அஞ்சும் தனது முன் மாதிரியாக கொண்டுள்ளார். அவரது விளையாட்டுத் தத்துவம் எளிமையானது ஆனால் ஆழமானது: "எதையும் சாதிப்பதற்குப் போராட்டம் அவசியம். அதுவே முக்கியமானது."