மீராபாய் சானு சைகோம் - இந்திய பளு தூக்குதல் வீராங்கனை
விளையாட்டு - பளு தூக்குதல்
நாடு - இந்தியா
பிறந்த தேதி - ஆகஸ்ட் 8, 1994
உயரம் - 4′11″
வசிக்கும் இடம் - மணிப்பூர்
பிறந்த இடம் - இம்பால்
ஒலிம்பிக் அனுபவம் - 2016, 2020, 2024

மீராபாய் சானு சைகோம் வாழ்க்கை வரலாறு
இந்தியாவின் மணிப்பூரைச் சேர்ந்த ஒரு தடகள வீராங்கனையான மீராபாய் சானு, 2008 ஆம் ஆண்டு இம்பாலில் உள்ள குமான் லம்பாக் விளையாட்டு வளாகத்தில் தனது பளுதூக்குதல் பயணத்தைத் தொடங்கினார்.
இந்திய பளுதூக்கும் வீராங்கனையான குஞ்சராணி தேவியால் ஈர்க்கப்பட்ட அவர், பளு தூக்குதல் விளையாட்டை தேர்வு செய்தார். அவரது பெற்றோர் துவக்கத்தில் அனுமதி அளிக்காத நிலையில், தன்னை விளையாட அனுமதிக்குமாறு தனது பெற்றோரை சமாதானப்படுத்தினார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு அவரை இந்தியாவின் தலைசிறந்த பளுதூக்குபவர்களில் ஒருவராக ஆக்கியுள்ளது.
2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக, அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் உள்ள ஸ்குவாட் பல்கலைக்கழகத்தில் சானு பயிற்சி பெற்றார். இந்திய தேசிய பயிற்சியாளர் விஜய் சர்மாவின் வழிகாட்டுதலின் கீழ் உடற் தகுதியை மீட்பது மற்றும் வலிமையை மேம்படுத்துவது போன்ற பயிற்சியில் அவர் கவனம் செலுத்தினார். இந்த கடுமையான பயிற்சி முறை அவரது வெற்றிக்கு உதவியது.
ஒலிம்பிக் பதக்கம்
டோக்கியோவில் 2020 ஒலிம்பிக்கில் 49 கிலோ பிரிவில் வெள்ளி வென்றது அவரது மறக்கமுடியாத சாதனைகளில் ஒன்றாகும். இந்தச் சாதனையின் மூலம் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய பளுதூக்கும் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை தவற விட்ட நிலையில், அதற்கான மீட்பாக இந்தப் பதக்கத்தை அவர் கருதுகிறார்.
காயங்கள் மற்றும் மீட்பு
சானு தனது வாழ்க்கையில் பல காயங்களை சந்தித்துள்ளார். டிசம்பர் 2022 இல், அவர் இடுப்பு அறுவை சிகிச்சை செய்து, மே 2023 இல் மீண்டும் போட்டிகளுக்கு திரும்பினார். 2022 உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பு அவர் இடது மணிக்கட்டில் காயம் அடைந்தார். ஆனால், வெள்ளிப் பதக்கத்தை வெல்ல முடிந்தது. கீழ் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளைத் தவறவிட்டார்.
இந்த பின்னடைவுகள் இருந்தபோதிலும், சானு அபாரமாக செயல்பட்டார். அவர் அமெரிக்க உடல் சிகிச்சை நிபுணர் ஆரோன் ஹார்ஷிக் உதவியுடன் காயத்தில் இருந்து மீண்டார். அதன் பின் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். சவால்களை சமாளிப்பதற்கான அவரது அர்ப்பணிப்பு வியப்பை ஏற்படுத்துவதாகும்.
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
சானு 2021 ஆம் ஆண்டிற்கான பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், செப்டம்பர் 2018 இல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதைப் பெற்றார். அதே ஆண்டில், இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.
2017 இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஸ்போர்ட்ஸ் விருதுகளில் ஆண்டின் சிறந்த பளுதூக்கும் வீராங்கனையாகவும், 2013 குவஹாத்தியில் நடந்த தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் சிறந்த பளுதூக்கும் வீராங்கனையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தனிப்பட்ட தாக்கங்கள்
சானு தனது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய நபராக தனது தாயை குறிப்பிடுகிறார். விளையாட்டு வீராங்கனை குஞ்சராணி தேவியின் சாதனைகள், சானுவை பளுதூக்குதல் விளையாட்டை தேர்வு செய்ய தூண்டியது.
எதிர்கால லட்சியங்கள்
2024 இல் பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வதை இலக்காகக் கொண்டுள்ளார் சானு. அவருடைய உறுதியும் கடந்தகால வெற்றிகளும் அவர் இந்த இலக்கை அடைவதற்கு வாய்ப்பு இருப்பதை உறுதி செய்கின்றன.