பாரிஸ் : 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் பத்தாவது நாளான ஆகஸ்ட் 5 அன்று இந்தியா தனது நான்காவது பதக்கத்தை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. பேட்மிண்டன் வீரர் லக்சயா சென் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்க உள்ளார்.
இதைத் தவிர்த்து ஓட்டப்பந்தயம், படகோட்டம், டேபிள் டென்னிஸ், துப்பாக்கி சுடுதல் ஆகிய போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆகஸ்ட் 5 அன்று இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ள போட்டிகள் :
மதியம் 12.30 - துப்பாக்கி சுடுதல் - ஸ்கீட் கலப்பு அணி தகுதிச் சுற்று
மதியம் 1.30 - டேபிள் டென்னிஸ் - மகளிர் அணிப் பிரிவு
மதியம் 3.25 - ஓட்டப்பந்தயம் - மகளிர் 400 மீட்டர் - முதல் சுற்று - பாஹல் கிரண்
மதியம் 3.45 - படகோட்டம் - மகளிர் டிங்கி - பந்தயம் - நேத்ரா குமணன்
மாலை 6.00 - பேட்மிண்டன் - ஆடவர் ஒற்றையர் - வெண்கலப் பதக்கப் போட்டி - லக்சயா சென்
மாலை 6.10 - படகோட்டம் - ஆடவர் டிங்கி - பந்தயம் - விஷ்ணு சரவணன்
இரவு 11.34 - தடகளம் - ஆடவர் ஸ்டீபிள்சேஸ் 3000 மீட்டர் முதல் சுற்று - அவினாஷ் முகுந்த்