ஏழை குழந்தைகளுக்காக செலவு
உலகின் மிகப் பெரிய பணக்காரர் விளையாட்டு வீரர், நம்பர் 1 வீரர் என்ற அனைத்து கிரீடமும் அவர் தலையில், இருந்தாலும் தலைக்கணம் இருந்ததே இல்லை. எவ்வளவு பெரிய உச்சத்தை தொட்டாலும் பழைய வாழ்க்கையை மறக்க கூடாது என்பது ஃபெடரின் தத்துவமாக இருந்தது. ரோஜர் ஃபெடரர் விளையாட்டு மூலம் பெற்ற பணத்தை ஏழை குழந்தைகளுக்காக செலவிட்டார்.
ஆப்பிரிக்க நாட்டுக்கு உதவி
குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைகளின் கல்வி, மருத்துவம் விளையாட்டிற்காக பெடரர் பெருமளவில் அள்ளி கொடுத்தார். ஓய்வு நேரத்தில் ஃபெடரர், ஆப்பிரிக்க நாட்டுக்கு சென்று குழந்தைகளுக்கு தன்னுடைய உதவி கிடைக்கிறதா என்று ஆய்வும் செய்வார். இதே போன்று ஃபெடரரின் தமிழ்நாட்டு பயணம், இங்கு பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கடலூரில் ஃபெடரர்
சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்த காலம். 2006 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் காலக்கட்டத்தில் ரோஜர் ஃபெடரர் கடலூரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட இடத்தை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக வந்து பார்வையிட்டார். அப்போது சுனாமியால் தாய் தந்தை இழந்த குழந்தைகள் வசகிக்கும் இடத்தை பார்வையிட்ட ஃபெடரர், அங்கு குழந்தைகளுக்கு நல்ல தண்ணீர் கிடைக்கிறதா என்பதை குடித்து பார்த்தார்.
ஃபெடரரின் இன்ப அதிர்ச்சி
அப்போது அங்கிருந்த 3 வயது பெண் குழந்தை அபிநயாவுடன் ரோஜர் பெடரர் கொஞ்சி விளையாடிய காட்சி காலத்தால் அழியாதவை. மேலும், அங்குள்ள குழந்தைகளுடன் பெடரர் கிரிக்கெட் விளையாடினார். இதே போன்று ஒரு முறை, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு சிறுவன், நீங்கள் நிறைய ஆண்டுகள் விளையாட வேண்டும். உங்களுடன் நான் பெரியவனாக பிறகு போட்டியிட வேண்டும் என்று கூநினார். இதற்கு ஓகே சொன்ன ஃபெடரர், சரியாக 7 ஆண்டுகள் கழித்து. அந்த சிறுவனை அழைத்து ரோஜர் ஃபெடரர் டென்னிஸ் விளையாடி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இனி டென்னிஸ் உலகில் ஃபெடரர் போன்ற வீரரை நாம் பார்க்கப்போவது இல்லை.