4 ஆண்டுகளுக்குப் பின்....இந்தியாவில் 2017-ல் ஆசிய தடகள போட்டிகள்!!
டெல்லி: 22-வது ஆசிய தடகள சாம்பியன்சிப் போட்டிகளை வரும் 2017-ஆம் ஆண்டு இந்தியா நடத்த உள்ளது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆசிய தடகள சம்மேளனத்தின் 83-வது கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2017ஆம் ஆண்டு இந்தியாவின் ராஞ்சியில் ஆசிய தடகளப் போட்டிகளை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக ஆசிய தடகள போட்டியை இந்தியா கடந்த 1989 ஆம் ஆண்டு டெல்லியிலும், 2013ஆம் ஆண்டு புனேயிலும் நடைபெற்றது.
இந்நிலையில் வரும் 2017ஆம் ஆண்டு ராஞ்சியில் மீண்டும் நடத்துகிறது இந்தியா. இருப்பினும் போட்டி நடைபெறும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தோஹாவில் நடக்கும் கவுன்சில் கூட்டத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story first published: Monday, October 26, 2015, 21:28 [IST]
Other articles published on Oct 26, 2015


Click it and Unblock the Notifications