ரியோ: ரியோ ஒலிம்பிக் போட்டியின் வில்வித்தை ரிகர்வ் பிரிவில் இந்திய மகளிர் அணி காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைத் தவறவிட்டுள்ளார் இந்திய வீராங்கனை ஹீனா சித்து.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் போட்டிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளன. இரண்டாம் நாளான இன்று பெண்கள் வில் வித்தை அணி காலிறுதிக்கான தகுதிச்சுற்றில் 5-3 என கொலம்பிய அணியை இந்திய அணி வீழ்த்தியது. அடுத்த போட்டியில் ரஷ்யாவை சந்திக்கிறது.

ரியோ ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைத் தவறவிட்டுள்ளார் இந்திய வீராங்கனை ஹீனா சித்து.
ரியோ ஒலிம்பிக் மகளிருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து 380 புள்ளிகளுடன் 14வது இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம், இறுதிச்சுற்றுச் செல்லும் வாய்ப்பை அவர் இழந்துள்ளார்.