ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்ஸ் 1,500 மீட்டர் துடுப்பு படகு போட்டியில் இந்திய வீரர் தத்து போக்கனால் காலிறுதிக்கு முன்னேறினார்.
பிரேசிலின் டி ஜெனிரோவில் 31-வது ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று 1,500 மீ படகு போட்டியின் தகுதி சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் தத்து போக்கனால் கலந்து கொண்டார்.
6 பேர் கலந்து கொண்ட இந்த தகுதிச் சுற்றில் இந்திய வீரர் போக்கனால் 7 நிமிடம் 21 நொடிகளில் பந்தய தூரத்தை கடந்தார். இதன் மூலம் காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார் போக்கனால். பந்தய தூரத்தை 7 நிமிடம் 6 விநாடிகளில் கடந்த கியூபா வீரர் ஏஞ்சல் ஃபோரியர் ரோட்ரிகியிஸ் முதலிடத்தை பிடித்தார். மெக்ஸிகோ வீரர் ஜுவான் காரோலஸ் கப்ரீரா 7 நிமிடம் 6 விநாடிகளில் கடந்து இரண்டாவது இடத்தை பிடித்தார்.