பாரா ஒலிம்பிக்: குண்டு எறிதலில் வெள்ளி வென்றார் இந்திய பெண் தீபா மாலிக் !
ரியோ: பிரேசிலின் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் தீபா மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பிரேசிலின் ரியோவில் ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதில் பெண்கள் குண்டு எறிதலில் இந்தியாவின் தீபா மாலிக் எப்.53 பிரிவில் பங்கேற்றார்.

இதில் 4.61 மீ., தூரம் வீசிய தீபா மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன்மூலம் பாராஒலிம்பிக் போட்டிகள் பதக்கம் வென்ற முதல் இந்தீய வீராங்கனை என்ற பெருமை பெற்றார் தீபா மாலிக்.
வெள்ளி பதக்கம் வென்ற தீபாவிற்கு ஹரியானா அரசு நான்கு கோடி ரூபாய் பரிசாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பாராஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
Story first published: Monday, September 12, 2016, 22:01 [IST]
Other articles published on Sep 12, 2016


Click it and Unblock the Notifications