ரியோ: ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் இன்று நடைபெறும் மூன்று போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் காலியிறுதி போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் களமிறங்குகிறார். இந்த போட்டியானது இந்திய நேரப்படி மாலை 5.50 மணிக்கு தொடங்குகிறது.
தடகளம்:
மகளிர் 800 மீ. தகுதிச்சுற்று போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த தின்டு லூக்கா பங்கேற்கிறார். இந்த போட்டி இரவு 7.25 மணிக்கு தொடங்குகிறது.

பேட்மிண்டன்:
ஆடவர் ஒற்றையர் காலிறுதி போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், சீனாவைச் சேர்ந்த லின் டான்வுடன் மோதவுள்ளார். இந்த போட்டி மாலை 5.50 மணிக்கு தொடங்குகிறது.
மல்யுத்தம்:
மகளிருக்கான 48 கிலோ பிரிவு தொடக்க சுற்று போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வினேஷ் போகத் பங்கேற்கிறார்.
மகளிர் 58 கிலோ பிரிவு தொடக்க சுற்று போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சாக்ஷி மாலிக் பங்கேற்கிறார். இந்த போட்டி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.