ரியோ டி ஜெனீரோ: ஒலிம்பிக், மகளிர் தனி நபர் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரியும், பொம்பைலா தேவியும் அடுத்தடுத்து தத்தமது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியைச் சந்தித்து வெளியேறினர். இதன் மூலம் இந்தியாவின் பதக்கக் கனவு இப்பிரிவில் முடிவுக்கு வந்தது.
காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் இந்தியாவின் தீபிகா குமாரி, சீனத் தைபேயின் யா டிங் டான் ஆகியோர் மோதினர். இதில் 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார் தீபிகா குமாரி.
யா டிங் டான் சிறப்பாக செயல்பட்டு தீபிகா குமாரியை செயலிழக்க வைத்து விட்டார். இந்தத் தோல்வியின் மூலம் இப்பிரிவில் இந்தியாவின் பதக்கக் கனவு பறிபோனது.
இன்னொரு காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் பொம்பைலா தேவி மோதினார். பொம்பைலா தேவி சற்று சிறப்பாக விளையாடினார் என்றுதான் சொல்ல வேண்டும். 2 செட்களை அவர் கைப்பற்றினார். ஆனால் அவரை எதிர்த்து மோதிய மெக்ஸிகோவின் அலெக்சாண்ட்ரா வெலன்சியா 6 செட்களைக் கைப்பற்றி வெற்றி பெற்று விட்டார்.
இந்த இரு தோல்வியின் மூலம் இப்பிரிவில் இந்தியாவின் பதக்கக் கனவு தகர்ந்து போய் விட்டது.