ரியோ: ரியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் 50 கி.மீ. நடைப் போட்டியில் இந்திய வீரர் சந்தீப் குமார் 35-ஆவது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
பிரேசிலில் ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 50 கி.மீ. நடைப் போட்டியில் இந்தியாவின் சார்பில் சந்தீப் குமார் கலந்து கொண்டார். இறுதிப் போட்டியில் சந்தீப் குமார் 4 மணி, 7 நிமிடம், 55 வினாடிகளில் இலக்கை எட்டினார். இதன் மூலம் சந்தீப் குமாரால் 35-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.
இந்தப் போட்டியில் ஸ்லோவேகியாவின் மாதேஜ் டோட் 3 மணி, 40 நிமிடம், 58 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் ஜேர்டு டேலன்ட் (3:41:16) வெள்ளியும், ஜப்பான் வீரர் ஹைரூகி அராய் (3:41:24) வெண்கலமும் வென்றனர்.