ரியோ: ரியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் 20 கி.மீ நடைப் போட்டியில் இந்திய வீராங்கனை குஷ்பிர் கெவுர் 54-வது இடத்தைப் பிடித்தார். இதேபோல மற்றொரு இந்திய வீராங்கனை சப்னா புனியா போட்டியை நிறைவு செய்யவில்லை.
பிரேசிலில் ரியோ ஒலிம்பிக்ஸ் நரடைபெற்று வருகிறது. ரியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் 20 கி.மீ நடைப் போட்டியில் இந்தியாவின் சார்பில் வீராங்கனைகள் குஷ்பிர் கவுர் மற்றும் சப்னா புனியா கலந்து கொண்டனர்.
இதில் குஷ்பிர் கவுர் 1 மணி 40 நிமிடம், 33 வினாடிகளில் இலக்கை எட்டினார். இதன் மூலம் அவரால் 54-வது இடத்தையே பெற முடிந்தது. இதேபோல இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை சப்னா புனியா இலக்கை எட்டாமல் போட்டியை நிறைவு செய்தார்.
இப்போட்டியில் சீன வீராங்கனை ஹாங் லியூ(1:28:35) முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றார். இரண்டாவது இடம் பிடித்த மெக்ஸிகோவின் மரியா குவாடலூப்(1:28:37) வெள்ளிப்பதக்கத்தையும், மூன்றாம் இடம்பிடித்த சீன வீராங்கனை ஷியூசி லியூ (1:28:42) வெண்கலமும் வென்றனர்