For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக்கில் இருந்து ரஷ்யாவிற்கு அதிரடி தடை.. ஊக்கமருந்து சோதனையில் என்ன நடந்தது? ஷாக் பின்னணி!

ரஷ்யாவின் கொடி மற்றும் தேசிய கீதம் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் எப்படி தடை செய்யப்பட்டது, இதற்கு பின் என்ன நடந்தது என்று முழு விவரம் வெளியாகி உள்ளது.

மாஸ்கோ: ரஷ்யாவின் கொடி மற்றும் தேசிய கீதம் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் எப்படி தடை செய்யப்பட்டது, இதற்கு பின் என்ன நடந்தது என்று முழு விவரம் வெளியாகி உள்ளது.

ரஷ்யாவின் கொடி மற்றும் தேசிய கீதம் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ரஷ்ய வீரர்/வீராங்கனை என்ற பெயரின் அடிப்படையில் யாரும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள முடியாது.

Russia banned from the Olympics for next 4 years: What really happened?

உலக ஊக்கமருந்து தடுப்பு பிரிவு இந்த தடையை செய்துள்ளது. ஒலிம்பிக் போன்ற மற்ற பெரிய போட்டிகளிலும் இவர்கள் கலந்து கொள்ள முடியாது. ரஷ்யாவை சேர்ந்த சில வீரர்கள் முறையான சோதனைக்கு பின் எந்த நாட்டின் பெயருக்கு கீழும் இல்லாமல் தனிப்பட்ட வீரர்களாக கலந்து கொள்ள முடியும் .

கடந்த 5 வருடமாக நடந்தப்பட்ட சோதனை, திருப்பங்கள் மூலம் இந்த தடை செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கடந்த 5 வருடமாக எவ்வளவு ஊக்கமருந்துகளை பயன்படுத்தி உள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தடைக்கு பின் என்ன நடந்தது என்று பார்க்கலாம்,

பிப்ரவரி. 2014 - ரஷ்யாவில் சோச்சி நகரத்தில் குளிர்கால ஒலிம்பிக்போட்டிகள் நடந்தது. சோவியத் யூனியன் பிரிந்த பின் ரஷ்யா நடத்திய முதல் ஒலிம்பிக் போட்டி இது. அதுவரை ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா சரியாக விளையாடியது இல்லை. ஆனால் இந்த போட்டியில் கடைசியில் ரஷ்யா வென்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது. 11 தங்கம் உட்பட 29 பதக்கங்களை வென்று ரஷ்யா முதலிடம் பிடித்தது.

டிசம்பர். 2014 - அப்போதுதான் ஜெர்மன் செய்தி நிறுவனமான ஏஆர்டி ரஷ்ய விளையாட்டு துறையில் இருக்கும் ஊழல்கள், ஊக்கமருந்து பொருள் பழக்கங்கள் குறித்து ஆதாரங்களை வெளியிட்டது. இந்த புகாரை வைத்ததில் முக்கியமானவர்கள் ரஷ்யாவின் ஊக்கமருந்து தடுப்பு பிரிவு முன்னாள் உறுப்பினர் விட்டாலி ஸ்டெப்பனொவ் ஆவார். ஆனால் இந்த புகாருக்கு பின் அவர் மாயமாகி தலைமறைவானார்.

நவம்பர். 2015 - இதையடுத்து ரஷ்யா மீது உலக ஊக்கமருந்து தடுப்பு பிரிவின் முன்னாள் கலைவர் டிக் பவுண்ட் நேரடியாக குற்றச்சாட்டு வைத்தார். இதனால் ரஷ்யாவின் ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு மொத்தமாக கலைக்கப்பட்டது. இதனால் தடகள போட்டியில் ரஷ்யா விளையாட கூடாது என்றது சர்வதேச தடகள சம்மேளனம் அறிவுரை வழங்கியது.

மே 2016 - ரஷ்யாவின் ஊக்கமருந்து தடுப்பு பிரிவின் முன்னாள் தலைவர் க்ரிகோரி ரோட்சென்கோவ் இது தொடர்பாக அளித்த வாக்குமூலம் தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியானது.இவர்தான் வீரர்களை ரத்த மாதிரிகளை நல்ல ரத்தங்களை மாற்றி வைத்து ஏமாற்றியது தெரிய வந்தது. அதன்பின் பல வீரர்களுக்கு ரஷ்யா இப்படி செய்தது தெரிய வந்தது. இதனால் 2008 மற்றும் 2012 ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் எல்லோரையுடன் ரத்தமும் சோதனை செய்யப்பட்டது. இதனால் ரஷ்ய வீரர்கள் பலர் அப்போது தடை செய்யப்பட்டார்கள்.

ஆகஸ்ட். 2016 - இதன்பின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா கலந்து கொண்டது. அப்போது நடந்த ஊக்கமருந்து சோதனையில் ரஷ்யாவின் பல வீரர்கள் தோல்வி அடைந்தனர் ஆனால் அப்போது ஒலிம்பிக் சம்மேளனம் ரஷ்யாவை தடை செய்யவில்லை. பாரா ஒலிம்பிக் போட்டியில் மட்டும் ரஷ்யா தடை பெற்றது. அதேபோல் குத்துசண்டை சம்மேளனம் ரஷ்யாவிற்கு குத்துசண்டை விளையாட தடை விதித்தது.

ஆகஸ்ட். 2017 - சரியாக இரண்டு வருடங்களுக்கு பிறகு லண்டனில் நடந்த ரஷ்யாவின் 19 வயதுக்கு குறைவான உலக சாம்பியன் போட்டிகளில் ரஷ்ய அணிக்கு கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அந்த போட்டிகளில் ரஷ்யாவின் சிலர் தங்கம் வென்றாலும் கூட ரஷ்யாவின் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை.

டிசம்பர். 2017 - 2014 முறைகேடு செய்து மாட்டியதால் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம், பியங்கியோங்கில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில் இருந்து ரஷ்யாவை தடை செய்தது. இதில் மொத்தம் 167 ரஷ்ய வீரர்கள் கலந்து கொண்டனர். அதில் 2 பேர் போதை பொருளை பயன்படுத்தியது அதன் மூலம் பதக்கம் வென்றது பின் தெரிந்தது.

ஜூன் - ஜூலை 2018 - ஆண்கள் கால்பந்து உலகக் கோப்பையை ரஷ்யா நடத்தியது. அப்போது பிபா ரஷ்ய வீரர்களுக்கு எதிராக ஊக்கமருந்து புகாரை பரிசீலனை செய்தது. ஆனால் அவர்கள் எதுவும் தடை விதிக்கவில்லை.

செப்டம்பர். 2018 - பல நாடுகளின் எதிர்ப்பை மீறி, ரஷ்யா மன்னிப்பு கேட்கவில்லை என்றாலும் கூட உலக ஊக்கமருந்து தடுப்பு பிரிவு, ரஷ்யாவின் ஊக்கமருந்து தடுப்பு பிரிவிற்கு மீண்டும் இயங்க அனுமதி அளித்தது. ஆனால் அனைத்து வீரர்களின் ரத்த மாதிரி தொடர்பான படிவங்களை சமர்பிக்கும்படி உலக ஊக்கமருந்து தடுப்பு பிரிவு நிபந்தனை வைத்தது.

அக்டோபர். 2018 - 2018ல் நடந்த ஒலிம்பிக் தொடங்கி பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளில் ரஷ்யாவின் ராணுவத்துடன் உதவியுடன் ரஷ்யா ஏமாற்றிவிட்டது என்று புகார் வைக்கப்பட்டது.

ஜூன் 2019 - இதன்பின் உலக ஊக்கமருந்து தடுப்பு பிரிவு முன்னாள் தலைவர் லாமைன் டியாக் மூலம் மீண்டும் பல்வேறு விசாரணை, சோதனை செய்யப்பட்டது. அதன்படி 3.5 மில்லியன் டாலர் இதில் முறைகேடு செய்யப்பட்டது. ஊக்கமருந்து சாப்பிட வேண்டும் என்று வீரர்களுக்கு பணம் கொடுத்து வற்புறுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர். 2019 - கத்தாரில் உலக தடகள போட்டியின் சாம்பியன்ஷிப் நடக்கும் சில நாட்களுக்கு முன் ரஷ்யாவின் வீரர்கள் குறித்து ரிப்போர்ட் வெளியானது. உலக ஊக்கமருந்து தடுப்பு பிரிவுவிடம் ரஷ்யா கொடுத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டு முடிவு தெரிந்தது. இதில் ரஷ்ய வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தி ஏமாற்றியது வெளியானது. இதில் விளக்கம் அளிக்க ரஷ்யாவிற்கு 3 வாரம் அவகாசம் வழங்கப்பட்டது.

டிசம்பர். 2019 -தற்போது ரஷ்யாவின் கோடி மற்றும் தேசிய கீதம் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ரஷ்ய வீரர்/வீராங்கனை என்ற பெயரின் அடிப்படையில் யாரும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள முடியாது.

Story first published: Tuesday, December 10, 2019, 16:44 [IST]
Other articles published on Dec 10, 2019
English summary
Russia banned from the Olympics for the next 4 years by the WADA: What really happened?.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X