
பரிசுகள்...
அதோடு, சாக்ஷியின் வெற்றியைக் கவுரவிக்கும் வகையில் அவருக்கு ஹரியானா அரசு அவருக்கு 2.5 கோடி ரூபாய் பரிசும், அரசு வேலையும் வழங்கியுள்ளது. இது தவிர மேலும் பல பரிசுகளும் அவருக்கு குவிந்து வருகின்றன.

ராணி லட்சுமி பாய் விருது...
இந்நிலையில் உத்தரப்பிரதேச அரசின் ராணி லட்சுமி பாய் விருதும் அவருக்கு தரப்பட உள்ளது. இந்த விருதானது, தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் சாதிக்கும் வீரர்களுக்கு உத்தர பிரதேச அரசு சார்பில் வழங்கப்படுவது ஆகும்.

வாழ்த்துக்கள்...
இது குறித்து அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘‘ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷிக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடைய அரசு அவருக்கு ராணி லட்சுமி பாய் விருது வழங்கி கவுரவிக்க இருக்கிறோம்'' என்றார்.

வெண்கல விருது...
‘ராணி லட்சுமி பாய்' படம் பொறித்த வெண்கல விருதுடன் 3.11 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











