ரியோ: பாலிவுட் நடிகரும் ரியோ ஒலிம்பிக்ஸின் இந்திய நல்லெண்ணத் தூதருமான சல்மான் கான் ஒலிம்பிக்ஸில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1,01,000 தொகை பரிசாக அறிவித்துள்ளார்.

பிரேசிலில் ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் 118 பேர் ரியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் விளையாட்டு வீரர்-வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக பாலிவுட் நடிகரும், ரியோ ஒலிம்பிக்ஸின் இந்திய நல்லெண்ணத் தூதருமான சல்மான் கான் ஒலிம்பிக்ஸில் பங்கேற்றுள்ள அனைத்து இந்திய வீரர்-வீராங்கனைகளுக்கும் ரூ.1,01,000 தொகை பரிசாக அறிவித்துள்ளார்.
இது குறித்து சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "விளையாட்டுத்துறைக்கு அரசு நல்ல ஆதரவு அளித்து வருகிறது. நாமும் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் விதமாக சிறு பங்களிப்பு செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.