3 மாத காதல்...
பிளேபாய் பத்திரிகைக்கு மாடலாக இருந்து வந்தவரான எமிலி ஸ்காட்டுடன் கடந்த 3 மாதமாக காதலில் ஈடுபட்டிருந்தார் வார்னே. தற்போது அதை முடித்து விட்டார்.
குழந்தை ஆசை...
இதற்கான காரணம் என்ன தெரியுமா.. வார்னே மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள எமிலி ஆசைப்பட்டதே. அதை தான் விரும்பவில்லை என்றும், தனக்கு ஏற்கனவே உள்ள குழந்தைகள் போதும் என்றும் வார்னே கூறுகிறார்.
காதலுக்கு வயதில்லை...
வார்னேவுக்கு 45 வயதாகிறது. அவரை விட 15 வயது இளையவர் எமிலி. ஆனால் இந்த வயது வித்தியாசத்தையும் தாண்டி இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.
நண்பர்களாக பிரிகிறோம்...
எமிலி குறித்து வார்னே கூறுகையில், எமிலி மிகவும் கூலானவர், அழகானவர், புத்திசாலியானவர், செக்ஸியானவர்.. எல்லாமே அவரிடம் உண்டு. ஆனால் அவர் வேறு பாதையில் உள்ளார். நான் என் பாதையில் போக விரும்புகிறேன். எனவே நண்பர்களாக இருவரும் பிரிந்துள்ளோம் என்றார்.
3 குழந்தைகள்...
வார்னேவுக்கு 17 வயதில் ப்ரூக், 12 வயதில் சம்மர் என இரு மகள்களும் 14 வயதில் ஜாக்சன் என்ற மகனும் உள்ளனர். இந்த மூவருமே அவரது முதல் திருமணத்தின் மூலம் பிறந்தவர்கள் ஆவர்.
காதல் வளர்த்தனர்...
3 மாத காதலில் வார்னேவும் எமிலியும் ஒரு நாள் கூட இடைவெளி விடாமல் காதலை வெளிப்படுத்தி வந்தனர். நேரிலும், டிவிட்டர் மூலமும் இருவரும் காதலை வளர்த்து வந்தனர். ஆனால் குழந்தை வேண்டும் என்று எமிலி கூறியதால் அதிருப்தி அடைந்தார் வார்னே. இதுவே இப்போது பிரிவு வரை போய் விட்டது.
முந்தைய காதல்...
இதற்கு முன்பு இப்படித்தான் நடிகை எலிசபெத் ஹர்லியுடன் சீரியஸாக காதலில் ஈடுபட்டிருந்தார் வார்னே. அவர் வார்னேவை திருமணம் செய்ய விரும்பியதால் அவரை பிரிந்தார் வார்னே. இந்தக் காதல் 4 மாதம் நீடித்தது. வார்னே மறுத்ததால் பாடகர் ரிச்சி நெவில்லியை மணந்து கொண்டு போய் விட்டார் எலிசபெத் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது எமிலியன் கதை முடிந்தது.. அடுத்து வார்னே சுழலில் சிக்கப் போவது யாரோ....?