
கடைசி ஓவரில் திகு திகு
இப்போட்டியில் கடைசி ஓவரில் கர்நாடகா புல்டோஸர் அணி 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை.

சாந்தனு கையில் பந்து
சாந்தனுதான் பந்து வீசினார். கடைசி ஓவரில் களத்தில் நின்றவர்கள் மகேஷும், பாஸ்கரும். இதில் இந்த பாஸ்கர்தான் கடைசி நேரத்தில் சற்றே சுதாரித்து ஆடி போட்டியை டைக்குக் கொண்டு போனவர். சாந்தனுவின் சுதாரிப்பில்லாத பந்து வீச்சை அவர் கர்நாடகாவுக்கு சாதகமாக்கிக் கொண்டார்.

10 பந்துகளில் 20 ரன்கள்
பாஸ்கர் 10 பந்துகளைச் சந்தித்து 20 ரன்களை எடுத்தார். மகேஷ் ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்தார்.

நல்லாத்தான் போனது
சாந்தனுவின் பந்துகளைச் சந்திக்க ஆரம்பத்தில் கர்நாடக வீரர்கள் தடுமாறத்தான் செய்தனர். இதனால் கடைசி 2 பந்துகளில் 14 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை.

பாஸ்கர் போட்ட சிக்ஸ்
அதில் முதல் பந்தில் பாஸ்கர் சிக்ஸர் அடித்து விட்டார். இதனால் கடைசிப் பந்தில் 8 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை.

சுதாரிச்சிருக்கலாமே பாஸ்
இந்தப் பந்தை சற்று கவனமாக போட்டிருந்தாலே போதும். ஆனால் நோ பால் போட்டு விட்டார் சாந்தனு. இதனால் எக்ஸ்ட்ரா பந்து கிடைத்து விட்டது. அந்த கூடுதல் பந்தில் ஒரு சிக்ஸர் அடிக்க மேட்ச் டை ஆனது.

கிச்சாவின் பாராட்டு
ஆனால் சென்னை அணியின் ஆட்டத்தை கர்நாடக அணியின் கேப்டன் கிச்சா சுதீப் பாராட்டத் தவறவில்லை. செய்தியாளர்கள் சந்திப்பின்போது, சென்னை ரைனோஸ் அணி வலுவானது. அவர்களுக்கு எதிராக விளையாடுவதை நாங்கள் எப்போதுமே விரும்புவோம். இரு அணிகளின் ரசிகர்களுக்குமே நாங்கள் விருந்து படைக்கும் வகையிலேயே ஆடுகிறோம் என்றார்.


Click it and Unblock the Notifications











