ஜிம்பாப்வேயிடம் தடுமாறியிருந்தாலும் இந்தியாவை நம்பிக்கையோடு எதிர்கொள்வோம்: டுமினி
மெல்போர்ன்: இந்தியாவை நம்பிக்கையோடு எதிர்கொள்ள உள்ளோம் என்று தென் ஆப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மேன் ஜே.பி.டுமினி தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா மோத உள்ள நிலையில், டுமினி கூறுகையில் "ஜிம்பாப்வேகுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 83 ரன்களுக்கே நான்கு விக்கெட்டுகளை இழந்தது.

அப்போது நானும், டேவிட் மில்லரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்து 339 ரன்களை குவிக்க செய்தோம். ஆனால் அதேபோன்ற இக்கட்டான நிலை மீண்டும் எங்கள் அணிக்கு வரக்கூடாது என்றே விரும்புகிறஏன்.
நெருக்கடியான நேரத்தில் நான் அடித்த 115 ரன்களும், மில்லரின் 138 ரன்களும் தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. நடப்பு உலக சாம்பியன் இந்தியாவை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொள்ள உள்ளோம். இவ்வாறு டுமினி தெரிவித்தார்.
Story first published: Thursday, February 19, 2015, 17:52 [IST]
Other articles published on Feb 19, 2015


Click it and Unblock the Notifications