For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாலிபான் தாக்குதல்-நூலிழையில் உயிர்தப்பிய பிளின்டாப்

Andrew Flintoff
காந்தகார்: ஆப்கானிஸ்தானில் நடந்த விருது வழங்கும் விழாவுக்கு சென்ற இடத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் நட்சித்திரம் பிளின்டாப் தாலிபான் தாக்குதலில் சிக்கி கொண்டார். இந்த சம்பவத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

இங்கிலாந்து கிரிக்கெட் நட்சத்திரம் பிளின்டாப், கேரி லினேகர் என்ற முன்னாள் இங்கிலாந்து கால்பந்து வீரர் இருவரும் டெய்லி மிரர் பிரைடு ஆப் பிரிட்டன் என்ற விருது வழங்கும் விழாவில் பங்கேற்க ஆப்கானிஸ்தான் சென்றனர்.

அவர்கள் காந்தகார் நகரில் இருக்கும் ஒரு விமான தளத்தில் நடந்த இரவு விருந்தில் கலந்து கொண்டனர். விருந்தின் போது திடீரென்று அபாய மணி அலறியது.

இதை தொடர்ந்து தாலிபான் ஏவுகணை ஒன்று விருந்து நடக்கும் இடத்தை நோக்கி வருவதாகவும், 30 வினாடிகளில் அது தாக்கலாம் என்பதால் விருந்தில் பங்கேற்ற அனைவரும் மேஜைக்கு அடியில் சென்று பதுங்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

முதலில் இது புரியாமல் விழித்த பிளின்டாப் மற்றவர்கள் அனைவரும் விருந்து மேஜைக்கு அடியில் செல்வதை பார்த்து, அவரும் உள்ளே சென்று ஒளிந்துகொண்டார். இதையடுத்து அவர்கள் அனைவரும் காயமின்றி தப்பினர்.

இந்த சம்பவம் குறித்து பிளின்டாப் கூறுகையில்,

இதனால் பீதி பெரும் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக நடப்பது எல்லாம் உயிருக்கு ஆபத்தானவையாக இருக்கிறது. இந்த சம்பவங்களை பத்திரிகையில் படிப்பது எளிது. ஆனால், இங்கு இருப்பது மிகவும் கடினமானது. வீரர்கள் தங்களது நாட்டுக்காக பெரிய தியாகங்களை செய்து வருகின்றனர்.

நான் நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். இங்கே வீரர்கள் நாட்டுக்காக போராடி கொண்டிருக்கிறார்கள் என்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:31 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+