
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதை லட்சியமாக கொண்டு உலகில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் செயல்பட்டு வருகின்றனர். அதற்காக பலர் தங்களின் வாழ்க்கையே தாகம் செய்து, பயிற்சி மேற்கொண்டு பதக்கம் பெறுகின்றனர். இதில் சிலருக்கு ஏமாற்றமும் ஏற்படுகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆன்டி முரே, ஒலிம்பிக் போட்டியில் வென்ற தங்கப்பதக்கத்தை, அவரது வீட்டு நாய்க்குட்டிகள் அணிந்த படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவரது காதலி டுவிட்டர் இணையதளத்திலும் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ஆன்டி முரேயின் காதலி கிம் ஷியர்ஸ் டுவிட்டர் இணையதளத்தில், ரஸ்டி(நாய் குட்டி) வெள்ளிப்பதக்கம் பொறுத்தமாக உள்ளதா என்று போட்டி பார்த்தேன் என்று தெரிவித்துள்ளார்.
இத்துடன் ஆன்டி முரேயின் வீட்டு நாய்க்குட்டிகளுக்கு, அவரது ஒலிம்பிக் பதக்கங்களை அணிவித்த போட்டோவும் டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதை கண்ட உலகின் பல முன்னணி விளையாட்டு வீரர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் கிடைக்கும் பதக்கத்திற்கு இவ்வளவு தான் மதிப்பா என்று பரபரப்பான கேள்வி எழுந்துள்ளது.
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் தோல்வியை தழுவிய ஆன்டி முரே, ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று சாதித்தார். ஆனால் அவரது பதக்கங்கள் வீட்டு நாய்களுக்கு போட்டு அழகு பார்த்தது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை.