துப்பாக்கி சுடுதல்: மீண்டும் அஞ்சலி-அவ்நீத் தோல்வி
பெய்ஜிங்: துப்பாக்கிச் சுடுதலில் அஞ்சலி பகவத் மற்றும் அவ்நீத் கெளர் சித்து ஆகியோர் மீண்டும் தோல்வியைத் தழுவினர்.
ஏற்கனவே தனி நபர் பிரிவில் தோல்வியைத் தழுவியவர்களான அஞ்சலி பகவத்தும், அவ்நீத் கெளர் சித்துவும் இன்று 50 மீட்டர் ரைபிள் பிரிவின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் மோதினர்.
இதிலும் அவர்களுக்கு தோல்வியே கிடைத்தது. அஞ்சலி பகவத் 571 புள்ளிகளைப் பெற்று 32வது இடத்தைப் பிடித்தார். அவ்நீத்தோ 552 புள்ளிகளை மட்டுமே பெற்று42வது இடத்திற்குத் தள்ளப்பட்டார். மொத்த போட்டியாளர்களின் எண்ணிக்கை 43 என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications