
அமெரிக்காவில் உள்ள ஒக்டென் பகுதியில் உலக கோப்பை வில்வித்தை (3ம் நிலை) போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் தருண்தீப் ராய், ஜெயந்த் தலுத்டர், ராகுல் பானர்ஜி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அமெரிக்கா அணிக்கு எதிரான எதிரான இறுதிப் போட்டியில், இந்திய அணி 213 புள்ளிகளுடன் சமநிலை பெற்றது.
இதனையடுத்து டை பிரேக்கரில் இந்தியா, அமெரிக்கா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. அமெரிக்கா வீரர்கள் எய்த 10 அம்புகளும் துல்லியமாக இருந்த நிலையில், இந்திய வீரர்களின் 9 அம்புகள் மட்டுமே துல்லியமாக இருந்தன. இதனால் 27-28 என்ற புள்ளிக் கணக்கில் அமெரிக்கா வெற்றிப் பெற்று, தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. நூலிழையில் தோல்வி அடைந்த இந்திய அணி வெள்ளிப் பதக்கம் பெற்றது.
அடுத்த மாதம் லண்டன் ஒலிம்பிக் போட்டி துவங்க உள்ள நிலையில், இந்திய வில்வித்தை வீரர்கள் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.