டெல்லி: சர்வதேச அளவில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்படும் விளையாட்டு துறையைச் சேர்ந்தவர்களுக்கான தேசிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. மிகச் சிறந்த திறமையை வெளிப்படுத்துவோருக்கு ராஜிவ்காந்தி கேல்ரத்னா விருதும், தொடர்ந்து சிறப்பாக செயல்படுவோருக்கு அர்ஜூனா விருதும் வழங்கப்படுகிறது. சிறந்த பயிற்சியாளருக்கு துரோணாசாரியார் விருதும், விளையாட்டு துறைக்கு வாழ்நாள் சேவை செய்தவர்களுக்கு தயான் சந்த் விருதும் வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள்.
இந்த ஆண்டுக்கான விருதுகளை இன்று நடக்கும் விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார்.