பெய்ஜிங்: குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் இன்று ரஷ்ய வீரரிடம் இந்திய வீரர் ஜிதேந்தர் குமார் தோல்வியடைந்தார். தகுதிச் சுற்றுகளில் வென்று இந்தியாவின் பதக்க நம்பிக்கையை குத்துச் சண்டை வீரர்கள் அதிகப்படுத்தினர். இதுவரை இல்லாத அளவு 3 குத்துச் சண்டை வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறினர். அவர்களில் அகில் குமார் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் தோல்வியுற்றார். இந் நிலையில் மற்ற ஜிதேந்தரும், விஜேயந்தரும் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினர். 51 கிலோ எடைப் பிரிவில் ஜிதேந்தர், ரஷ்ய வீரர் ஜியார்ஜி பாலஷின்னை சந்தித்தார். ஆனால், ஜிதேந்தரை ஜியார்ஜி 11-15 என்ற கணக்கில் வென்றார். ஜியார்ஜி 3 முறை ஐரோப்பிய ஜாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.