உ.கோ.பாட்மின்டன்: காலிறுதியில் ஜூவாலா-டிஜூ

உலக கோப்பை பாட்மின்டன் தொடர் ஹைதராபாத்தில் நடக்கிறது. இதில், நேற்று நடந்த கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் ஜூவாலா குட்டா, டிஜூ ஜோடி, போலந்தின் ராபர்ட் மெட்சியாக், நடிசிஸ்டா ஜோடியை சந்தித்தது.
இந்த போட்டியில் இந்திய ஜோடி துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. முதல் ஆட்டத்தை 21-11 என வென்றது. அடுத்த ஆட்டத்தையும் 22-10 என எளிதாக கைப்பற்றியது. இறுதியில் 21-11, 21-10 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.
காலிறுதியில் இந்த ஜோடி, இந்தோனேசியாவின் நோவா விடியான்டோ, லிலியானா நட்சிர் ஜோடியை எதிர்கொள்கிறது.
சேத்தன் ஆனந்த் அதிர்ச்சி தோல்வி...
ஆண்கள் ஒற்றையர் மூன்றாவது சுற்றுப்போட்டியில் இந்தியாவின் சேத்தன் ஆனந்த் 16-21, 16-21 என்ற ஆட்டக்கணக்கில் இந்தோனேசியாவின் சோனி குன்கரோவிடம் தோல்வியடைந்தார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:29 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications