லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று கோலாகல துவக்க விழாவுடன் துவங்கியது. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் நேற்று நடைபெற்ற வில்வித்தை போட்டிகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இன்று 2வது நாளாக இந்திய வீரர்கள் பல போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். இதில் குத்துச்சண்டை, பளு தூக்குதல், துடுப்பு படகு போட்டிகளில் கலந்து கொள்ளும் வீ்ரர்கள், வீராங்கனைகள் குறித்த விபரம் வருமாறு:
வில்வித்தை:
வில்வித்தை போட்டியில் நேற்று முதல் சுற்று முடிவடைந்த நிலையில், இன்று ஆண்களுக்கான 2வது சுற்று முதல் இறுதிப் போட்டி வரையுள்ள போட்டிகள் நடைபெற உள்ளது.
துடுப்பு படகு:
துடுப்பு படகு போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் ஸ்கல் பிரிவின் தகுதி சுற்றில் இந்தியாவின் ஸ்வரன் சிங் இன்று மாலை 5 மணி களமிறங்க உள்ளார்.
பளுத்தூக்குதல்:
பெண்களுக்கான பளுத்தூக்குதல் போட்டியில் இன்று இந்தியாவின் சோனியா சானு(48) பங்கேற்க உள்ளார். இரவு 8 மணிக்கு நடைபெற உள்ள இந்த போட்டியில் மொத்தம் 14 வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
டேபிள் டென்னிஸ்:
டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா வீராங்கனை அங்கிதா தாஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இன்று மாலை 4.30 மணிக்கு களமிறங்குகிறார். அதேபோல ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியில் சவும்யாஜித் கோஷ் கலந்து கொள்ள உள்ளார். இந்த போட்டி இரவு 8.30 மணிக்கு நடைபெற உள்ளது. இவர்கள் இருவரும் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
குத்துச்சண்டை:
இந்திய குத்துச்சண்டை வீரர்கள் இன்று களம் காண உள்ளனர். இதில் கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற விரேந்தர் சிங் 75 கிலோ பிரிவில் களமிறங்க உள்ளார். விரேந்தர் சிங் முதல் சுற்றில் கசகிஸ்தானின் தனபிக் சூகானோ உடன் மோத உள்ளார். 56 கிலோ பிரிவில் சிவ தபா களமிறங்க உள்ளார். இவர் முதல் சுற்றில் மெக்சிகோ வீரர் ஆஸ்கார் வால்டிஸ் பிரோவை சந்திக்க உள்ளார்.