
லண்டன் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் விஜேந்தர் சிங், அமெரிக்காவின் டெரல் கவுஷாவுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் சுற்றில் விஜேந்தர் சிங் 4-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். விறுவிறுப்பாக நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இருவரும் 5-5 என சமன் செய்தார்.
மூன்றாவது மற்றும் கடைசி சுற்றிலும் இருவரும் படு ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர். வீரர்கள் இருவரும் சளைக்காமல் மோதிக்கொண்டது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதியில் 16-15 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியாவின் விஜேந்தர்சிங் வெற்றி பெற்றார். இதன் மூலம் காலிறுதிக்குத் தகுதி பெற்றார் விஜேந்தர்சிங்.
கடந்த பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் பெற்றுக் கொடுத்தவர் விஜேந்தர்சிங் என்பது குறிப்பிடத்தக்கது.