
இந்நிலையில் 64 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் மனோஜ்குமார், இங்கிலாந்தின் தாமஸ் ஸ்டால்கரை எதிர்கொண்டார். முதல் சுற்றில் மனோஜ்குமார் 4-7 என்ற கணக்கில் பின் தங்கியிருந்தார். 2வது சுற்றிலும் 5-9 என்ற புள்ளி கணக்கில் மனோஜ்குமார் பின் தங்கியிருந்தார்.மூன்றாவது சுற்றிலும் 7 புள்ளிகளை மனோஜ்குமார் பெற்றிருந்தார். இதனால் மனோஜ்குமார் 16-20 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் தமது தோல்விக்கு மோசடிதான் காரணம் என்று மனோஜ்குமார் குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும் இது ஒலிம்பிக் போட்டி போல் இல்லை..மாவட்ட குத்துச் சண்டை போட்டி போல் இருக்கிறது என்றும் சாடியுள்ளார்.