டெல்லி: தேசிய விளையாட்டுப் போட்டிகள் ஐந்தாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. 34வது தேசிய விளையாட்டுப் போட்டிள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெறுவதாக உள்ளது. ஆனால் இதுவரை நான்கு முறை அது ஒத்திவைக்கப்பட்டு விட்டது.இந்த நிலையில் தற்போது 5வது முறையாக போட்டியை ஒத்தி வைத்து இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அது முடிந்த பிறகே போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி கூறுகையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குழு கூடி சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் போட்டிகளை நடத்துவதென தீர்மானித்துள்ளது என்றார்.2007ம் ஆண்டே இந்தப் போட்டி நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் அடுத்தடுத்து நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது 5வது முறையாக ஒத்திவைத்துள்ளனர்.