டெல்லி: ஐபிஎல் ஸ்பாட் பி்க்ஸிங் விவகாரத்தில் இதுவரை எந்த ஒரு வெளிநாட்டு வீரரும் விசாரிக்கப்படவில்லை என்று டெல்லி போலீஸார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் கூறுகையில், ஐபிஎல் சூதாட்ட ஊழலில் இதுவரை இந்தியர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் மட்டும்தான் இப்போதைக்கு விசாரணை நடந்து வருகிறது.
ஸ்ரீசாந்த், அஜீத் சண்டிலா, அங்கீத் சவான் ஆகிய வீரர்கள் மற்றும் 12 புக்கிகள் இதுவரை கைதாகியுள்ளனர் என்றார் குமார்.