For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பதவி உயர்வு தராத ராணுவம்-வெள்ளி வென்ற விஜயக்குமார் கோபம்- விலக முடிவு!

By
Vijay Kumar
டெல்லி: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றவர் இந்திய வீரர் விஜய்குமார். ஆனால் அவருக்கு ராணுவத்தில் பதவி உயர்வு அளிக்கப்படாததால், ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் விஜய்குமார்(25) கலந்து கொண்டார். இந்திய ராணுவத்தில் சுபேதார் பதவியில் உள்ள இவர், ஒலிம்பிக் போட்டியில் 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்த நிலையில் 6 ஆண்டுகளாக இந்திய ராணுவம் தரப்பில் பதவி உயர்வு எதுவும் வழங்கப்படாததை அடுத்து அதிருப்தி அடைந்துள்ள விஜய்குமார், ராணுவத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் எனக்கு, துப்பாக்கி சுடுதலுக்கு தேவையான பயிற்சிகளை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு அன்றாட தேவைகளுக்கான செலவிற்கு பணம் தேவைப்படுகிறது.

கடந்த 2006ம் ஆண்டு முதல் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை பெற்றுள்ளேன். கடந்த 2010ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியி்ல 3 தங்கம், 1 வெள்ளி பதக்கங்களை வென்றேன். ஆனால் ராணுவத்தில் எனக்கு ஒரு பதவி உயர்வோ, பாராட்டு விருதோ அளிக்கவில்லை. எனது பதவி உயர்விற்கு பரிந்துரை கூட செய்யப்படவில்லை.

இதனால் பல பதக்கங்களை வென்றாலும், நான் சுபேதாராகவே பணியாற்றி வருகிறேன். சிறப்பாக செயல்படும் ஒருவருக்கு மூத்த அதிகாரிகளால், பதவி உயர்விற்கு பரிந்துரைக்கப்பட வேண்டும். ஆனால் எனக்கு எந்த பதவி உயர்வும் அளிக்கப்படவில்லை.

கடந்த 2010 காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஹரியானா, பஞ்சாப் உட்பட பல மாநிலங்கள் பதவி உயர்வை வழங்கியது. ஆனால் தேசிய, சர்வதேச போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கும் இமாச்சல பிரதேச அரசின் பரசுராம், இமாச்சல் கவுரவ் போன்ற விருதுகள் கூட எனக்கு அளிக்கப்படவில்லை.

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பிறகு கூட எனக்கு பதவி உயர்வு வழங்க மறுத்தால் ராணுவத்தில் இருந்து விலகி விடுவேன் என்றார்.

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற இவருக்கு, இமாச்சல பிரதேச மாநில அரசு ரூ.1 கோடி பரிசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் குமாரை சமாதானப்படுத்தி, பதவி உயர்வு மற்றும் ரொக்க பரிசு வழங்கப்படும் என்று இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

Story first published: Tuesday, August 7, 2012, 11:48 [IST]
Other articles published on Aug 7, 2012
English summary
London Olympic silver-medalist shooter Vijay Kumar said that he wants to leave Indian Army as he has not been given a single promotion in last six years despite good performances at the national and international levels.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+