
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான தத்தி தாண்டுதல் போட்டியின் தகுதிச் சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இதில் மொத்தம் 27 வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் ஏ மற்றும் பி என்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் ஏ பிரிவில் இந்திய வீரர் ரஞ்சித் மகேஸ்வரி இடம் பெற்றார்.
தகுதிச் சுற்றில் இந்திய வீரர் ரஞ்சித் மகேஸ்வரிக்கு அளிக்கப்பட்ட 3 வாய்ப்புகளையும், பெளல் செய்தார். இதனால் எந்த புள்ளிகளும் எடுக்காமல் போட்டியில் இருந்து வெளியேறினார். முன்னதாக கடந்த 2010ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ரஞ்சித், தனிப்பட்ட முறையில் அதிகபட்சமாக 17.07 மீட்டர் தாண்டியுள்ளார்.
இந்த நிலையில் இன்றைய தகுதிச் சுற்று போட்டியில் ஏ பிரிவில் முதலிடத்தை பிடித்த பிரான்ஸ் வீரர் வீரர் பெஞ்சமின் 17.6 மீட்டர் தாண்டினார். பி பிரிவில் முதலிடம் பிடித்த அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் டெய்லர் 17.21 மீட்டர் தாண்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இந்தியாவிற்கு தடகளத்தில் மற்றொரு பதக்க வாய்ப்பு பறிபோனது.